ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜூலை 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களின் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 15 ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் பங்கேற்று, குறைகள், கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.