சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஜூலை 15 இல் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜூலை 15 ஆம் தேதி (திங்கள்கிழமை)  சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் ஜூலை 15 ஆம் தேதி (திங்கள்கிழமை)  சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. 
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களின் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 15 ஆம் தேதி மாலை 3  மணிக்கு  நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் பங்கேற்று,  குறைகள்,  கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com