ராமநாதபுரத்தில் தொழிலதிபரை மிரட்டி ரூ.50 லட்சம் பறிப்பு: இளைஞர் கைது

ராமநாதபுரத்தில் தொழிலதிபரை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் இளைஞர்  வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.


ராமநாதபுரத்தில் தொழிலதிபரை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் இளைஞர்  வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரதீப். ஒப்பந்தப்பணி தொழிலதிபர். இவரை கரூரைச் சேர்ந்த சரவணகுமார் (31) உள்ளிட்ட சிலர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது பிரதீப்வை மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறித்துள்ளனர். 
இதுதொடர்பாக புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். அப்போது பிரதீப்புடன் செல்லிடப்பேசியில் சரவணக்குமார் உள்ளிட்ட சிலர் பேசிய  உரையாடல் மூலம் பணம் பறித்தது உறுதி செய்யப்பட்டது.   இதனைத்தொடர்ந்து கரூரைச் சேர்ந்த சரவணகுமாரை போலீஸார் வியாழக்கிழை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.9 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
இதையடுத்து சரவணக்குமாரை ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2 இல் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவரை பிடித்து விசாரிப்பதாகவும், சிலரைத் தேடி வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com