கமுதி அருகே இளைஞர் வெட்டிக்கொலை: மதுரையைச் சேர்ந்த 2 பேர் கைது

 கமுதி அருகே பழிக்குப் பழியாக, இளைஞரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மதுரையைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

 கமுதி அருகே பழிக்குப் பழியாக, இளைஞரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மதுரையைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள எருமைகுளத்தை சேர்ந்த வழிவிட்டான், மதுரையில் 2 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யபட்டார். இக்கொலையில் பெருநாழி அருகேயுள்ள அரியமங்கலத்தை சேர்ந்த மாரி மகன் சேகர் ஈடுபட்டுள்ளார். மதுரையில் பல்வேறு கொலை வழக்குகளில் இவருக்கு தொடர்புள்ளதால், தற்போது சேகர் சிறையில் உள்ளார்.  இந்நிலையில், சேகரை பழிவாங்கும் நோக்கில், வழிவிட்டானின் உறவினர்கள் சில நாள்களாக, சேகரின் தம்பி மணிகண்டனை (23) கொலை செய்யத் திட்டமிட்டனர். 
இதனால் அதே ஊரை சேர்ந்த கருப்பணன் மகன் (17) தலைமையில்  மதுரையை சேர்ந்த 6 சிறுவர்கள் அரியமங்கலம் வந்துள்ளனர். சனிக்கிழமை  மணிகண்டனிடம் மதுபாட்டில் வாங்கி வரச்சொல்லி ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் அரியமங்கலம் இ- சேவை மையம் அருகே பதுக்கி வைத்திருந்த அரிவாள் மற்றும் வாள்களால், மணிகண்டனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அக்கும்பலைச் சேர்ந்த 7 பேரும் தப்பியோடினர். இதுகுறித்து பெருநாழி போலீஸார் வழக்குப் பதிந்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். வெட்டி கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வாகனத்தில் மதுரைக்கு தப்பிச் சென்றனர். இந்நிலையில் திருமங்கலம் போலீஸார் நடத்திய வாகன சோதனையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த 17 வயதுடைய 2 பேரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com