மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்றுடன், ஆழ்கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், ராமேசுவரம் சுற்றுவட்டாரப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் சனிக்கிழமை தடை விதித்தனர். இதனால் துறைமுகங்களில் 1,500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசத் தொடங்கி உள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கவில்லை. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள துறைமுகங்களில் 1,500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.