ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே இருவேலி கிராமத்தில் உள்ள தர்ஹாவில் உண்டியல் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை சனிக்கிழமை திருடிச் சென்றனர்.
சாயல்குடி அருகே இருவேலி கிராமத்தில் சாயல்குடி -கமுதி பிரதான சாலையில் அமைந்துள்ள தர்ஹாவின் உண்டியல் பூட்டை இரவில் மர்மபநபர்கள் உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து இருவேலி கிராம ஜமாத் உறுப்பினர்கள் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.