திருவாடானை அருகே வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்து 9 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருவாடானை அருகே செவ்வாய்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்தாஸ். இவரது மனைவி சகாயம் மலர்( 32). இவர் வியாழக்கிழமை இரவு கோயில் திருவிழாவிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த, 9 பவுன் நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து சகாய மலர் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.