பரமக்குடி காந்திசிலை முன்பு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரரும், தினமணி-இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களின் முன்னாள் தலைமை இயக்குநருமான பி.டி.கோயங்காவின் 40-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஐ.ஏ. ஹாரிஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், மில்கா செந்தில், டி.என்.சி.சி. தகவல் அறியும் உரிமைத்துறை மாநிலச் செயலாளர்
வி.முகம்மதுஅப்பாஸ், எழுத்தாளர் உரப்புளி நா.ஜெயராமன், என்.காஜாமுகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நல்லாசிரியர் எஸ்.ஆர்.லெட்சுமி நாராயணன் சுதந்திரப் போராட்ட வீரர் பி.டி.கோயங்காவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்க நிர்வாகிகள், நகர் முக்கியப் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.