குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் நகரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் சேதுபதி அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எம்.ஏ.எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்தார். இதில் செயலர் கு.விவேகானந்தன், பொருளாளர் ஆர்.சேதுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அப்துல்கலாமின் சேவை மனப்பான்மை குறித்து பேசினர். ராமநாதபுரம் தமிழ்த்தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தனபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் உணவகத் தொழிலதிபர் குரு, தமிழ்த் தேசியஅமைப்பின் நிர்வாகி கலாம் அய்யனார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.