கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்கு பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சதர்ன்பிரபாகர் வெள்ளிக்கிழமை தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்மையில் நடந்து முடிந்த, பரமக்குடி தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் சதர்ன்பிரபாகர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்ட அவர் தனது சொந்த ஊரான கமுதி அருகே உள்ள பேரையூருக்கு வெள்ளிக்கிழமை திரும்பினார். இதையடுத்து அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்துக்குச் சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது கமுதி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.காளிமுத்து, மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் சத்தியேந்திரன், இளைஞரணி துணைத் தலைவர் அம்சராஜ், முதுகுளத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் செந்தில்குமார், விவசாய அணி செயலாளர் அழகர்சாமி, சாயல்குடி கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.