திருவாடானை அருகே நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ் தலைமை வகித்தார். அதேபோல் திணைக்காத்தான் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி, பன்னவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, பாண்டுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த உறுதி மொழியில் பள்ளிக்கு குழந்தைகள் செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர்கள் முறையினை முற்றிலுமாக அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு பாடுபடுவேன் என்று பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.