முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு, நூலகத்திற்கு புத்தகம் வழங்குதல், 2018-19 கல்வியாண்டில் 10,12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ஆடிட்டர் யுவராஜ், பள்ளி பொறுப்பாளர் நவநீதன், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் லெட்சுமணன், முன்னாள் தலைவர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அகமது பைசல் வரவேற்றார்.விழாவில் கிராம பெரியோர்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.