தேவகோட்டை அருகே ஒப்பந்ததாரரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 24th March 2019 12:35 AM | Last Updated : 24th March 2019 12:35 AM | அ+அ அ- |

தேவகோட்டை அருகே உரிய ஆவணங்களின்றி ஒப்பந்ததாரர் எடுத்துச்சென்ற ரூ.4 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேவகோட்டை அருகே ஆராவயல் பகுதியில் வட்டாட்சியர் மூர்த்தி தலைமையில், ஆராவயல் காவல் சார்பு ஆய்வாளர் சூசை மைக்கேல் ராஜ் உள்ளிட்டோரைக் கொண்ட பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டதேவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சொர்ணலிங்கத்திடம் ரூ. 4 லட்சத்து 2 ஆயிரத்து 890 இருந்தது. அப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.