தந்தை, மகனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு: இளைஞர் கைது
By DIN | Published On : 18th May 2019 07:25 AM | Last Updated : 18th May 2019 07:25 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே தந்தை, மகனைத் தாக்கிய 3 பேர் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஒருவரைக் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது சாலைவலசை. இங்கு பெட்டிக்கடை வைத்திருப்பவர் கவியரசன் (29). வியாழக்கிழமை அவரது கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (19) உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கவியரசனின் தந்தை நாகேந்திரன் தட்டிக்கேட்டுள்ளார்.
உடனே தினேஷும் அவருடன் வந்த இருவர் சேர்ந்து கல் மற்றும் கட்டைகளால் கவியரசன், அவரது தந்தை நாகேந்திரன் ஆகியோரைத் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸார் வழக்குப்பதிந்து தினேஷைக் கைது செய்தனர். மேலும் நவீன், சேகர் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.