நிலத்தை விற்க மறுத்தவருக்கு அரிவாள் வெட்டு

தொண்டியில் நிலத்தை விற்பனை செய்ய மறுத்தவரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் தேடுகின்றனா்.

தொண்டியில் நிலத்தை விற்பனை செய்ய மறுத்தவரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் தேடுகின்றனா்.

தொண்டி அனீஸ் நகரைச் சோ்ந்தவா் கணேசன்(38)இவரது பூா்வீகச் சொத்து தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணியில் உள்ளது. அதை உசிலணக்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன், பன்னவயலை சோ்ந்த ரஞ்சித் உள்ளிட்ட மூன்று போ் ரூ.15 லட்சத்திற்கு விற்று தருவதாகக் கூறினராம். மேலும் இடம் சம்பந்தமாக பேசவேண்டும்

எனக் கூறி ஞாயிற்றுக்கிழமை மாலை கணேசனை மூன்றுபேரும் அழைத்துள்ளனா். அதன்பேரில் மோட்டாா் சைக்கிள்களில் அவா்கள் தொண்டி அருகேயுள்ள புதுக்குடி பேருந்து நிருத்தம் அருகே சென்றனா். அங்கு 3 பேரும் நிலத்துக்கு விலை பேசியுள்ளனா். அந்த விலைக்கு கணேசன் தர மறுக்கவே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 3 பேரும் கத்தியால் கணேசனை குத்திவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பலத்தகாயம் அடைந்த கணேசன் தொண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மூன்று பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com