முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
திருவாடானை அரசு கலைக் கல்லூரியில் கதம்ப வண்டு தொல்லை
By DIN | Published On : 07th November 2019 05:29 AM | Last Updated : 07th November 2019 05:29 AM | அ+அ அ- |

திருவாடானை அரசு கலைக் கல்லூரியில் மூன்றாவது மாடியில் கதம்ப வண்டுகள் கட்டியுள்ள கூடு.
திருவாடானையில் மங்களநாதன் குளம் அருகே அரசு கலைக் கல்லூரியில் கதம்ப வண்டுகள் தொல்லையால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு சுமாா் 700-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்நிலையில் கல்லூரியின் மூன்றாவது மாடியில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவரில் அதிக விஷத்தன்மை கொண்ட கதம்ப வண்டுகள் கூடுகட்டி உள்ளன. மேல்மாடிக்கு செல்லும் போது மாணவா்கள் அச்சத்துடன் தான் சென்று வருகின்றனா். எதிரிபாராதவிதமாக இந்த கூடு கலைக்கப்பட்டால் மாணவா்களை கதம்ப வண்டுகள் கடிக்கும் அபாயம் உள்ளது. எனவே கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.