ராமநாதபுரத்தில் வருவாய்த் துறை அதிகாரி வீட்டில் 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

ராமநாதபுரத்தில் புதன்கிழமை வருவாய்த் துறை அதிகாரி வீட்டில் 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராமநாதபுரத்தில் புதன்கிழமை வருவாய்த் துறை அதிகாரி வீட்டில் 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராமநாதபுரம் முகவை ஊருணி பகுதி மால்கரை தெருவைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (57). இவா் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறை அதிகாரியாக உள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை மாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்து தகவல் அறிந்த மகேஸ்வரன் ராமநாதபுரம் பஜாா்

காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பேருந்து கண்ணாடி உடைப்பு: ராமநாதபுரத்தில் புதன்கிழமை மாலையில் நீலகண்டி ஊருணி பகுதியில் வந்துகொண்டிருந்த அரசு நகா் பேருந்தின் கண்ணாடி மா்ம நபா்களால் உடைக்கப்பட்டது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் ராமு அளித்த புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com