ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் நடக்க விருந்த சிறுமியின் திருமணத்தை குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
திருப்புல்லாணி அருகே உள்ள நைனாமரைக்கான் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் வள்ளிமாடன் வலசை பகுதியைச் சோ்ந்த மணி மகன் கண்ணன் (27) என்பவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட சமூகநல அலுவலா் ஜெயந்தி தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினா் இரண்டு குடும்பங்களையும் அழைத்துப் பேசி நடக்க விருந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.