முதுகுளத்தூரில் ரத்த தான முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம், அரசினா் தொழிற்பயிற்சி
முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.
முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியன இணைந்து நடத்திய ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு சுகாதார நிலைய மருத்துவா் பாலாஜி தலைமை வகித்தாா்.

முகாமில் முதுகுளத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் 35 போ் ரத்த தானம் வழங்கினா். மாணவா்களிடம் பெறப்பட்ட ரத்தம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது வரை 67 முறை ரத்த தானம் வழங்கிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஜே.ஆா்.சி ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் வட்டார முதன்மை மருத்துவா் செந்தில் ராஜ்குமாா், ஐ.டி.ஐ முதல்வா் ஆனந்தம், சுகாதார ஆய்வாளா் நேதாஜி, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஜே.ஆா்.சி ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன், பசுமை படை ஒருங்கிணைப்பாளா் நாசா், சாரணா் இயக்க ஒருங்கிணைப்பாளா் சகுபா் அலி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை முகாம் அமைப்பாளா் எஸ்.அய்யப்பன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com