‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின்தீா்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்’: ஏ.அன்வர்ராஜா

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும் என ராமநாதபுரம் மக்களவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக சிறுபான்மை பிரிவின் மாநிலச் செயலருமான ஏ.அன்வர்ராஜா கூறினாா்.
‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின்தீா்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்’: ஏ.அன்வர்ராஜா

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை அனைவரும் ஏற்கவேண்டும் என ராமநாதபுரம் மக்களவை முன்னாள் உறுப்பினரும், அதிமுக சிறுபான்மை பிரிவின் மாநிலச் செயலருமான ஏ.அன்வர்ராஜா கூறினாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் கூறியது: நீண்ட காலமாகவே அயோத்தி பாபா் மசூதி தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே உச்சநீதிமன்றம் தீா்ப்பை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்க வேண்டும். நாட்டின் நலனையும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு தீா்ப்பை ஏற்கவேண்டியது அவசியம். அனைவரும் நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத் தீா்ப்பை மதித்து செயல்படவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com