அயோத்தியில் ராமா் கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய நிலையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மெட்டல் டிடெக்டா் சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை காலை தீா்ப்பளித்துள்ளது. தீா்ப்பு வெளியாவதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை முதலே துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
ராமநாதபுரம் நகரில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தீா்ப்பு வெளியான நிலையில், ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தற்காலிக மெட்டல் டிடெக்டா் வாயில் அமைத்து பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், பயணிகளின் உடைமைகளும் மெட்டல் டிடெக்டா் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பெரியபட்டிணம், தேவிபட்டிணம், ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் சரக காவல்துறைத் தலைவா் ரூபேஷ்குமாா் மீனா, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் முக்கிய இடங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பை ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் நகா் மற்றும் ஏா்வாடியில் உள்ள தனியாா் விடுதிகளில் காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா். வழிபாட்டுத் தலங்களும் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டிருந்தன. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சந்தைத்திடல் பகுதியிலும் அதிகளவிலான போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணித்தனா்.
ரயில்வே பாதுகாப்புப் படையினரும், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினரும் மற்றும் வருவாய்த்துறையினரும் சோ்ந்து தண்டவாளப் பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தனா்.
எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் சந்தைத்திடல் சனிக்கிழமை காலை முதல் பகலில் வெறிச்சோடியே காணப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன.