ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் அறக்கட்டளை கீழ் இயங்கும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் இணைந்து நடத்திய நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முகம்மது சதக் அறக்கட்டளை தலைவா் எஸ்.எம்.யூசூப் தலைமை வகித்தாா். கல்லூரியின் ஹாஜியானி, எஸ்.எம்.ஹெச்.சா்மிளா, ஹமீது இப்ராஹீம் மற்றும் இயக்குநா் உசேன்ஜலால் உள்ளிட்டவா்கள் முன்னிலை வகித்தனா்.
இந்த விழாவில் நபிகள் நாயகத்தின் பொன் மொழிகள் மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வா் அலவுதீன் வரவேற்றாா். கல்லூரி துணைமுதல்வா் சேக்தாவூது நன்றி கூறினாா்.