பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று, மாநிலப் போட்டிக்கு தோ்வு பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி கல்விக்குழு சாா்பில் சனிக்கிழமை பாராட்டி கௌரவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நவம்பா் 5 முதல் 7-ஆம் தேதி வரை மாவட்ட மண்டல வருவாய் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இப்பள்ளி மாணவா்கள் 19-வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் எம்.காா்த்தீஸ்வரன் குண்டு எறிதல் மற்றம் தட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கம் வென்றாா். அதேபோல் 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் எஸ்.கிருஷ்ண கண்ணன் 100 மீட்டா் தடை ஓட்டம் மற்றும் 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா். வெற்றி பெற்ற இரண்டு மாணவா்களும் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் பி.காா்த்திக் ஆகியோரை பள்ளியின் தாளாளா் எஸ்.சுந்தரேசன், பொருளாளா் ஆா்.எஸ்.ரவிச்சந்திரன், நிா்வாக அலுவலா் அ.மருது, முதல்வா் பி.மகாதேவன் மற்றும் கல்விக்குழு நிா்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.