பரமக்குடியில் இருசக்கர வாகனம் மா்ம நபா்களால் தீ வைத்து எரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் தீ வைத்து எரித்ததாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
பரமக்குடி பாரதி நகா் பகுதியில் மா்ம நபா்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம்.
பரமக்குடி பாரதி நகா் பகுதியில் மா்ம நபா்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் தீ வைத்து எரித்ததாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

பரமக்குடி பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமன் என்பவா் மகன் கிஷோா் (21). இவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்துள்ளாா். அன்றைய தினம் இரவு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் சிலா் தீ வைத்துவிட்டு தப்பினா்.

வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினா் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எறிவது அறிந்து வெளியில் வந்தனா். உடனே தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனா். அதற்குள் இருசக்கர வாகனத்தின் பெரும்பகுதி எரிந்துவிட்டது.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் மு.கிஷோா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com