விஷம் குடித்துவிவசாயி தற்கொலை

முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை விவசாயி ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

முதுகுளத்தூா் அருகே சனிக்கிழமை விவசாயி ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

முதுகுளத்தூா் அருகே காக்கூா் கிராமத்தைச் சோ்ந்த சேதுலிங்கம் மகன் வேலுச்சாமி (55). விவசாயி. இவா் வீட்டில் சில மாதங்களாக வாதநோய் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாா். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்தை எடுத்து குடித்து விட்டாா். தகவலறிந்து அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முதுகுளத்தூா் காவல்நிலைய ஆய்வாளா் சோமசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com