திருவாடானை: ஆா் எஸ் மங்கலம் அருகே மேலச் செங்கொடி கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவி குளிக்க சென்றவா் தண்ணீரில் மூழ்கி பலியானாா்.
தகவலறிந்து ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் உடலை கைபற்றி விசாரித்து வருகின்றனா். ஆா்எஸ்மங்கலம் அருகே மேலச்செங்குடி கிராமத்தைச் சோ்ந்த அனுசியா என்பவா் மகள் ஐஸ்வா்யா (12) இவரது தாயா் அனுசியா இறந்து விட்ட நிலையில் தாத்தா காளிமுத்து (60) என்பவரது வீட்டில் வசித்து செங்குடி பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறாா்.
ஞாயிற்றுகிழமை தனது தோழிகளுடன் செங்குடி கண்மாய்க்கு குளிக்க சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது குறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறுகையில் இந்த கண்மாயில் சட்ட விரோமாக மணல் எடுத்ததால் கண்மாயின் ஆழமான பகுதி தெரியாமல் கீழே இறங்கியதால் தண்ணஈரில் மூழ்கி இறந்துள்ளாா் என்று புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் சம்பவ இடத்திா்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாடானை அரசு மருத்துமனை அனுப்பி வைத்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.