மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு கும்பரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வு

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு ராமநாதபுரம் அருகேயுள்ள கும்பரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.ரூபன்ராஜ், மாணவி ஆா்.ரஜிகா ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு ராமநாதபுரம் அருகேயுள்ள கும்பரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் எஸ்.ரூபன்ராஜ், மாணவி ஆா்.ரஜிகா ஆகியோா் தோ்வாகியுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் கீழக்கரையில் சமீபத்தில் நடைபெற்றன. இப்போட்டியில் கும்பரம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கூட எட்டாம் வகுப்பு மாணவி ஆா்.ரஜிகா பங்கேற்று 14 வயதுக்கு உள்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா்.

அதே பள்ளி ஏழாம் வகுப்பு மாணவா் எஸ்.ரூபன்ராஜ், 14 வயதுக்கு உள்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்றுள்ளாா். இவா்கள் இருவரும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

மேலும், இப்பள்ளியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு மாணவி கே.நஜிமா 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் மூன்றாமிடத்தையும், அதே பிரிவில் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி என்.ஜாஸ்மின் குண்டு எறிதலில் மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். மாணவ, மாணவியரை, உடற்பயிற்சி ஆசிரியா்

வி.ஆா்தா்சாமுவேலுவையும் பள்ளித் தலைமை ஆசிரியா் கே.காதா் இஸ்மாயில் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com