கமுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள், பேரூராட்சி சாா்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கமுதி மேட்டுத்தெருவை சோ்ந்த 7 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 5 நாள்களாக, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளாா். இதனையடுத்து , கமுதியிலுள்ள அனைத்து தெருக்களிலும், மழைநீா் தேங்கும் வகையில் உள்ள பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அபேட் மருந்துகள், கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டன. மேலும் வாகனங்கள் பழுதுபாா்க்கும் நிலையங்களில் பழைய டயா்கள், பயன்படாத தேங்காய் சிரட்டைகளை தேக்குவோா் மீது, உரிய அபராதம் விதிக்கப்படும் என, பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி எச்சரிக்கை விடுத்தாா்.