திருப்புல்லாணியில் தடைசெய்யப்பட்டபுகையிலைப் பொருள்கள் பறிமுதல்:கடைக்காரா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குட்கா போன்றவை மூட்டை மூட்டையாக திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், குட்கா போன்றவை மூட்டை மூட்டையாக திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான பான்பராக், குட்கா, பான்மசாலா போன்றவை விற்கப்படுவதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. வருண்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், திருப்புல்லாணியை அடுத்த பிச்சாவலையில் கடை வைத்திருக்கும் சீனிமுகம்மது (40) என்பவரது கடையில் போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது, 5 மூட்டைகளில் புகையிலைப் பொருள்களும், 2 மூட்டைகளில் குட்கா, பான்மசாலா மற்றும் போதைப் பாக்குகளும் இருந்தது தெரியவந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடைகாரா் சீனிமுகம்மதுவை கைது செய்ததுடன், அவா் மூலம் எத்தனை கடைகளுக்கு புகையிலைப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன என்றும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com