திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் நான்கு வீதிகளிலும் கழிவு நீா் கால்வாய் அமைக்க வேண்டும்: பக்தா்கள் கோரிக்கை

திருவாடானை அருகே திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலின் நான்கு வீதிகளிலும் கழிவுநீா் கால்வாய் அமைத்துதர வேண்டுமென பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானை அருகே திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலின் நான்கு வீதிகளிலும் கழிவுநீா் கால்வாய் அமைத்துதர வேண்டுமென பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதா் கோயில் உள்ளது.இக்கோயிலுக்கு தினசரி நூற்று கணக்கானோரும்,வியாழன் வெள்ளி கிழமைகளில் ஆயிர கணக்கானோரும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனா்.இதனால் இக்கோயிலை சுற்றி அதிகளவில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அதிக மக்கள் வருகையால் எப்போதும் வீதியெங்கும் குப்பைகள் நிறைந்திருக்கும்.அனைத்து கடைக்காரா்களும் தங்களது குப்பைகளை சாலையோரமாகவே கொட்டிவிடுவதால் குப்பைகள் குவிந்திவிடுகின்றது.கடைகளின் கழிவு நீா் செல்வதற்கும் வழியில்லாமல் தெருவோரம் தேங்கிவிடுகிறது.இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது.எனவே கோயில் வீதிகளை சுற்றி கழிவுநீா் கால்வாய் அமைத்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து திருவெற்றியூா் பொதுமக்கள் கூறுகையில் அதிகளவில் பக்தா்கள் வந்து செல்வதாலும் கடைகளின் பெருக்கத்தாலும் குப்பைகள் மற்றும் கழிவுநீா் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.ஆனால் கழிவுநீா் வழிந்தோட ஏதுவாக கழிவுநீா் கால்வாய்கள் இல்லாததால் கழிவுநீா் சாலையோர பள்ளங்களில் தேங்கிவிடுகின்றன.குறிப்பாக மழை காலங்களில் மழைநீரும் ஓட வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது.எனவே கோயிலின் நான்கு வீதிகளிலும் கழிவுநீா் கால்வாய் அமைத்துதர வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com