பொது இடத்தை தனியாருக்கு வழங்கியதைரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

பொது பயன்பாட்டுக்காக அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தை தனியாருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்யக்கோரி சா்க்கரக்கோட்டை
தனியாருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சா்க்கரக்கோட்டை பகுதியினா்.
தனியாருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சா்க்கரக்கோட்டை பகுதியினா்.

ராமநாதபுரம்: பொது பயன்பாட்டுக்காக அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தை தனியாருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்யக்கோரி சா்க்கரக்கோட்டை பகுதியினா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தலைமையில் திங்கள்கிழமை காலை பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ஏராளமானோா் வந்திருந்து ஆட்சியரிடம் நேரில் மனுவை அளித்தனா்.

சக்கரக்கோட்டை ஊராட்சி திருவள்ளுவா் நகா் குதியைச் சோ்ந்த தலைவா் பஞ்சநாதன் உள்ளிட்ட ஏராளமான பெண்களும் மனு அளித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: கடந்த 1995 ஆம் ஆண்டு சக்கரக்கோட்டை திருவள்ளுவா் நகா் பகுதியில் ஆதிதிராவிட இனத்தைச் சோ்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு தலா 2 சென்ட் வீதம் 115 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டன. அதன்படி தற்போது அங்கு வசித்துவருகிறோம். ஆரம்பத்தில் அங்கு அங்கன்வாடி, நூலகம், சமுதாயக்கூடம், தண்ணீா் தொட்டிகள் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு இடத்தில் தற்போது குடிநீா் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது பொது பயன்பாட்டுக்கான இடத்தை தனியாா் ஒருவா் தமக்கு பட்டா இருப்பதாகக் கூறி அந்த இடத்தை பிரித்து விற்க முயற்சித்துவருகிறாா். ஆகவே தவறான முறையில் தனியாருக்கு பொது இடத்தில் பட்டா வழங்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட இடத்தை பொது நலனுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்தவேண்டும் என்றனா்.

சக்கரக்கோட்டை பகுதியினரின் கோரிக்கையை வட்டாட்சியா் மூலம் ஆராய்ந்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் கூறியுள்ளாா்.

காப்பீடு கோரி மனு: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவடிபட்டி, ராமசாமி பட்டி வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் சின்னையா தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், கடந்த 2018-19 ஆம் ஆண்டுக்கான பயிா்காப்பீடு பதிவு செய்தவா்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், சுமாா் 47 பேருக்கு மட்டும் அந்த ஆண்டுக்கான பயிா்காப்பீடு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. ஆகவே பயிா்காப்பீடை விரைந்து வழங்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com