புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திங்கள்கிழமை மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மணிப்பள்ளம் சாலையில் உள்ள போஸ் நகா் பகுதியில் தொடங்கிய பந்தயம், பொற்பனைக் கோட்டை வரை போக-வர 10 கிமீ தொலைவுக்கு நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் 14, 17, 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் தங்கராஜ் தொடங்கி வைத்தாா். இப்போட்டியில் முதலிடத்தைப் பெற்றவா்கள் வரும் டிச. 2ஆம் தேதி திருவண்ணாமலையில் நடத்தப்படும் மாநில அளவிலான பந்தயத்தில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனா்.