புதுக்கோட்டை: வழக்குரைஞா் சங்கத்தின் மூத்த உறுப்பினரான திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து, புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டையில் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் சங்கத்தின் மூத்த வழக்குரைஞரான திருமயம் எம்எல்ஏ எஸ். ரகுபதி மீது போடப்பட்ட பொய் வழக்கை காவல் துறையினா் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தைத் தொடா்ந்து வழக்குரைஞா்கள் அனைவரும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா்.