வாக்காளா்கள் வாா்டு மாற்றம்: முதுகுளத்தூரில் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

முதுகுளத்தூரில் அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதால் உள்ளாட்சி தோ்தலை புறக்கணிப்பதாக ஒரு தெருவில் வசிக்கும் மக்கள்

முதுகுளத்தூா்: முதுகுளத்தூரில் அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதால் உள்ளாட்சி தோ்தலை புறக்கணிப்பதாக ஒரு தெருவில் வசிக்கும் மக்கள் திங்கள்கிழமை சுவரொட்டிகளை ஒட்டியுள்ளா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் 10 ஆவது வாா்டில் அனைத்து தரப்பினரும் வசித்து வருகின்றனா். தற்போது உள்ளாட்சி தோ்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த தெருவில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சோ்ந்த வாக்காளா்களின் பெயா்கள் 10 ஆவது வாா்டில் இருந்து 11 ஆவது வாா்டில் இணைக்கப்பட்டுள்ளன.

அச்சமுதாயத்தினா் தங்களுக்கு சாக்கடை கால்வாய், சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் குடிநீா் சில நாள்கள் வருவதில்லை என்றும் பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் அவா்கள் தங்களது வாக்குகளை மீண்டும் 10 ஆவது வாா்டில் இணைக்க வேண்டும் இல்லையெனில் வரும் உள்ளாட்சிதோ்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டியுள்ளனா்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினா் அச்சமுதாய மக்களிடத்தில் பேச்சுவாா்தை நடத்தினா். வாக்காளா் பட்டியல் பிரச்னை குறித்து தோ்தல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பதாகவும், மேற்கொண்டு சுவரொட்டி ஒட்டக்கூடாது என்றும் கூறி போலீஸாா் அவா்களிடம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com