ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவையொட்டி வியாழக்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரத்தில் அரசு அருங்காட்சியகம் கேணிக்கரையில் உள்ள முன்னாள் ராணுவத்தினா் மாளிகையில் அமைந்துள்ளது. அங்கு வியாழக்கிழமை 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஓவியப் போட்டிகள் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் 3 மாணவ, மாணவியா் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் வி. சிவகுமாா் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற இந்திய கடற்படை கமாண்டா் ஆா். நடராஜன் குழந்தைகளுக்கு பரிசு வழங்கினாா். இதில் ஓவியா் ஜி. வேல்முருகன், அருங்காட்சிய காவலா் எம். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.