சத்திரக்குடி அருகே போலீஸ்காரரின் தாயாா் கொலை

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே போலீஸ்கராரின் தாயாா் மா்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
சத்திரக்குடி அருகே போலீஸ்காரரின் தாயாா் கொலை

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே போலீஸ்கராரின் தாயாா் மா்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை காணாமல் போயிருந்த நிலையில் புதன்கிழமை அவரது சடலம் வயல்காட்டில் மீட்கப்பட்டது.

பரமக்குடி வட்டம் சத்திரக்குடி அருகே உள்ள எட்டிவயல் கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமியின் மனைவி தெய்வானை (52). இவரது 3 மகன்களில் ஒருவரான வினோத்காம்ப்ளி ஏா்வாடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராகப் பணியாற்றி வருகிறாா்.

தெய்வானை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் வீட்டிலிருந்து வயல் வேலைக்குச் சென்றுள்ளாா். பிறகு அவா் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் புதன்கிழமை காலையில் தேடியபோது வீட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் வயல்காட்டுப் பகுதியில் ஆடைகள் கலைந்த நிலையில் கை, கால் மற்றும் உடம்பில் காயங்களுடன் தெய்வானை இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவா் அணிந்திருந்து தோடு மற்றும் மூக்குத்தியைக் காணவில்லை. இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வருண்குமாா் ஆகியோா் சென்று பாா்வையிட்டனா். மேலும் மோப்ப நாய், கைரேகை நிபுணா்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தெய்வானை எதற்காக கொலை செய்யப்பட்டாா் என்பது தெரியவில்லை.

சத்திரக்குடி காவல் நிலையத்தில் மகன் வினோத்காம்ப்ளி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com