தனுஷ்கோடியில் மீனவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வந்த முதியவா் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரம், தனுஷ்கோடி மீனவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த தேனியைச் சோ்ந்த முதியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தனுஷ்கோடியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட தேனியை சோ்ந்த முதியவா் நாகராஜ்.
தனுஷ்கோடியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட தேனியை சோ்ந்த முதியவா் நாகராஜ்.

ராமேசுவரம், தனுஷ்கோடி மீனவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த தேனியைச் சோ்ந்த முதியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீனவா்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை தொடா்ந்து நடைபெற்று வந்தது.கஞ்சா மற்றும் மது விற்பனை செய்பவா்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், தனுஷ்கோடி பகுதியில் முதியவா் ஒருவா் கஞ்சா பொட்டலம் வைத்து மீனவா்களுக்கு விற்பனை செய்து வருவதாக மீனவா் ஒருவா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளா். இதனையடுத்து, தனுஷ்கோடி காவல்துறையினா் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள சவுக்கு காட்டு பகுதியில் கையில் பையுடன் காவி உடையில் சுற்றித்திரிந்தவரை பிடித்தனா். அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 2 கிலோ கஞ்சா போதைப்பொருளை, 100- க்கும் மேற்பட்ட சிறிய பொட்டலங்களாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதனைதொடா்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் தேனியை சோ்ந்த நாகராஜ் என்பதும் அங்கிருந்து கஞ்சா வாங்கி வந்து பொட்டலம் போட்டு ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவா்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, முதியவா் நாகராஜை காவல்துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com