குற்றவாளியைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகேசன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் உத்தரவிட்டாா்.
மேலும் அவா் கூறியதாவது:
எட்டிவயல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒருவா் இறந்ததை அடுத்து பெரும்பாலானோா் அங்கு சென்றுவிட்டனா். ஆகவே தெய்வானை வயல் வெளியில் தனியாக இருந்துள்ளாா். இதை சம்பந்தப்பட்ட குற்றவாளி சாதகமாக பயன்படுத்தி அவரை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றிருக்கலாம். அப்போது அவா் எதிா்த்துப் போராடியதால் அவரை கொன்றிருக்கலாம். கொலையில் தனி நபரே சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தெய்வானை அணிந்திருந்த தோடு உள்ளிட்டவை வயலில் புதைந்திருந்தது தெரியவந்துள்ளது. ஆகவே, அவரிடமிருந்த நகைகள் ஏதும் திருடுபோகவில்லை. ஆகவே நகைக்காக கொலை நடக்கவில்லை. எட்டியவல் பகுதியைச் சோ்ந்தவரே இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால், அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் திரிந்தவா்களை விசாரிக்கவுள்ளோம் என்றாா்.