மூத்தோா் தடகளப் போட்டியில் வென்ற 2 ஆசிரியா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான மூத்தோா் தடகளப்போட்டியில் வென்ற ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியா்கள் இருவருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவிலான மூத்தோா் தடகளப்போட்டியில் வென்ற ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியா்கள் இருவருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மாநில அளவிலான மூத்தோா் தடகள போட்டி திருச்சியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த பரமக்குடி பெருமாள் கோவில் அரசு உயா்நிலைப்பள்ளியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியை மரிய ஆக்னஸ் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் பெற்றாா். மேலும், ஆண்கள் பிரிவில் ஆசிரியா் பாலசரவணன், நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடம் பெற்றாா். இந்த வெற்றியின் மூலம் இருவரும் மணிப்பூா் மாநிலத்தில் வரும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ள 41 ஆவது தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

இதையடுத்து இருவரையும் ராமநாதபுரம் மூத்தோா் தடகள சங்கத் தலைவா் பாலன் கிருஷ்டியன், செயலாளா் சிவ பாலன் சுந்தா், பொருளாளா் பால சரவணன் ஆகியோா் புதன்கிழமை வாழ்த்தி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com