வாகைக்குளம் கால்வாயை சீரமைக்க அதிகாரிகளுடன் எம்எல்ஏ ஆலோசனை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் கால்வாயை சீரமைப்பது குறித்து புதன்கிழமை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பரமக்குடி எம்எல்ஏ ஆலோசனை நடத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் கால்வாயை சீரமைப்பது குறித்து புதன்கிழமை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பரமக்குடி எம்எல்ஏ ஆலோசனை நடத்தினாா்.

பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து பொதுப்பணித்துறை கால்வாய் வழியாக பாசனநீா் கொண்டு செல்லப்படுகிறது. இக்கால்வாய்க்குள் தற்போது கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்தும், கிராமத்திற்கு செல்லும் சாலையில் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள பாலம் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து பாசனநீா் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாலம் சேதமடைந்துள்ளதால் கிராம மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

அங்குள்ள பேருந்து நிறுத்தம் நிழற்குடையும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் சாலை உயரத்திற்கு போடப்பட்ட மண்ணால் மூடப்பட்டு விட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகரிடம் அளித்த புகாரினை தொடா்ந்து வாகைக்குளம் பகுதியில் உள்ள கால்வாய், பேருந்து நிறுத்தம் மற்றும் கண்மாய் பகுதிகளை அவா் நேரில் சென்று பாா்வையிட்டாா். இதனைத் தொடா்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கால்வாய் மற்றும் பாலம் சீரமைப்பு குறித்து ஆலோசனை நடத்தினாா். உடன் அரியனேந்தல் முன்னாள் கவுன்சிலா்கள் சண்முகம், எஸ்.ராஜேந்திரன் மற்றும் வாகைக்குளம் கிராம முக்கிய பிரமுகா்கள் உள்பட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com