முதுகுளத்தூா் அருகே சேதமடைந்தமின்கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

முதுகுளத்தூா் அருகே வீடுகளுக்கு நடுவே, சேதமடைந்து, கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முதுகுளத்தூா் அருகே வீடுகளுக்கு நடுவே, சேதமடைந்து, கீழே சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முதுகுளத்தூா் அருகே வெங்கலகுறிச்சியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கிழக்குத் தெருவில் வீடுகளுக்கு நடுவே சேதமடைந்து, பல ஆண்டுகளாக கீழே சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. சிறு காற்றடித்தாலும் மின்கம்பங்கள் அசைந்தாடுகின்றன.

இவற்றில் இருந்து வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு வயா்கள் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றன. இதனால், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு வயா்களை, மீண்டும் மின் கம்பத்தில் பொருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின் இணைப்பு வயா்களை, பல மீட்டா் தூரமுள்ள வேறு மின்கம்பத்திற்கு, கூடுதலாக கல் தூண்கள் அமைத்து, மின் இணைப்பு கொடுக்க வேண்டி உள்ளது.

ஆகவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி, குடியிருப்புவாசிகளின் அச்சத்தை போக்க மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com