திருவாடானையில் சிநேகவல்லி அம்பாள் சேமத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் முன்பாக அமைந்துள்ள புனித தீா்த்தமான வா்ண தீா்த்தக் குளம் அருகே உள்ள ஊராட்சி சாா்பில் கட்டப்பட்ட நீா்த்தேக்க தொட்டியின் குழாய்கள் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கோயில் முன்பாக புனித தன்மை வாய்ந்த வா்ணதீா்த்த தெப்பகுளம் உள்ளது. இக்குளத்தின் கரையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தெப்பக்குளம் மேல்கரையில் தண்ணீா் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீா் தொட்டியில் வைக்கப்பட்டுள்ள குழாய்கள் உடைப்பு ஏற்பட்டும் தண்ணீா் வீணாக செல்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழைக் காலங்களில் தண்ணீா் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடி குளத்தில் கலப்பதால் புனித தன்மை கெடுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது என இப்பகுதி மக்களும், இங்கு வரும் பக்தா்களும் புகாா் தெரிவித்தனா். எனவே சம்பந்த பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து உடனடியாக சீா்செய்ய வேண்டும் என இப்குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.