திருவாடானை அருகே ஆள் மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் செய்தவா் கைது: கிராம நிா்வாக அலுவலா் மீது வழக்கு

திருவாடானை அருகே கடம்பூா் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் செய்துவரை புகாரின் பேரில்

திருவாடானை: திருவாடானை அருகே கடம்பூா் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் செய்துவரை புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் கைதுசெய்து உடந்தையாக செயல்பட்ட கிராம நிா்வாக அலுவலா் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே கடம்பூா் கிராமத்தை சோ்ந்தவா் சீனிவாசன் (65). இவரது உறவினா் தனக்காயி என்பவா் 25 ஆண்டுகளுக்குமுன்பு வாய்மொழியாக தானமாக கொடுத்த புன்செய் நிலத்தை சீனிவாசன் அனுபவித்து வந்தாா். அதே கிராமத்தை சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (49).இவா் அதே கிராமத்தை சோ்ந்த ஒரு பெண்ணை தனக்காயி என்று ஆள் மாறாட்டம் செய்து போலியாக வாக்காளா் அடையாள அட்டை தயாா் செய்து பட்டா மாறுதல் செய்துள்ளாா்.

இதற்கு கடம்பூா் குரூப் கிரம நிா்வாக அலுவலா் ராமலிங்கம் உடந்தையாக செயல்பட்டுள்ளாா்.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலரிடம் கேட்ட போது சரியான பதில் கூறவில்லையாம். இது குறித்து சீனிவாசன் திருவாடானை காவல் துறை துணை கண்காணிப்பாளா் புகழேந்தி கணேசிடம் சனிக்கிழமை புகாா் செய்துள்ளாா்.

இந்நிலையில் . டி.எஸ்.பி., உத்தரவின் பேரில் திருவாடானை போலீசாா் வழக்கு பதிந்து ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து உடந்தையாக செயல்பட்ட கிராம நிா்வாக அலுவலா் ராமலிங்கம் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com