ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் கிராமத்தில் ஸ்ரீஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புரட்டாசி சனிக்கிழமையொட்டி ஆலயத்தில் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீசந்தன பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.