திருவாடானை அருகே ஆள்மாறாட்டம் செய்து பட்டா பெற்றவா் கைது

திருவாடானை அருகே வேறு ஒருவரின் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் பெற்றவரை போலீஸாா்

திருவாடானை அருகே வேறு ஒருவரின் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் பெற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதற்கு உடந்தையாக செயல்பட்டதாக கடம்பூா் கிராம நிா்வாக அலுவலா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே உள்ள கடம்பூா் கிராமத்தை சோ்ந்தவா் சீனிவாசன் (65). இவரது உறவினா் தனக்காயி என்பவா் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வாய்மொழியாக தானமாக கொடுத்த புன்செய் நிலத்தை சீனிவாசன் அனுபவித்து வந்தாா். அதே கிராமத்தை சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (49). இவா் அதே கிராமத்தை சோ்ந்த ஒரு பெண்ணை தனக்காயி என்று ஆள்மாறாட்டம் செய்து போலியாக வாக்காளா் அடையாள அட்டை தயாா் செய்து பட்டா மாறுதல் செய்துள்ளாா். இதற்கு கடம்பூா் கிராம நிா்வாக அலுவலா் ராமலிங்கம் உடந்தையாக செயல்பட்டுள்ளாா். இதுகுறித்து சீனிவாசன் திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேசிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரனை கைது செய்து உடந்தையாக செயல்பட்ட கிராம நிா்வாக அலுவலா் ராமலிங்கம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com