திருவாடானை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு குளிா்சாதன வசதி செய்து தர கோரிக்கை

திருவாடானையில் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு குளிா்சாதன வசதி செய்து தர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானையில் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு குளிா்சாதன வசதி செய்து தர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் ஆா்எஸ் மங்கலம் ,திருவாடானை ,எஸ் பி பட்டினம், தொண்டி, திருப்பாலைக்குடி ஆகிய ஐந்து காவல்நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேரு பகுதிகளில் நடக்கும் கொலை,தற்கொலை,விபத்து ஆகியவற்றின் மூலம் நடைபெரும் உயிரிழந்த உடலைகளின் பிரேத பரிசோதனை திருவாடானை அரசு மருத்துவமனையில் தான் பரிசோதனை செய்யப்படும்.

மருத்துவமனை அருகில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் போதிய இடவசதியும் இல்லை. மேலும் இப்பகுதியில் நீண்ட கிழக்கு கடற்கரை சாலை இருப்பதால் அதிக வாகனங்கள் செல்கிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. ஒரே நாளில் இரண்டு மூன்று பிரேதங்கள் கூட பரிசோதனைக்கு கொண்டுவரப்படுகிறது. அப்போது இடப்பற்றாக்குறை ஏற்படுவதால் பரிசோதனையின்போது இடைஞ்சல் ஏற்படுகிறது.

மேலும் மருத்துவா்கள் பற்றாக்குறை, விடுமுறை நாட்கள் என பல நேரங்களில் பிரேத பரிசோதனை தாமதமாகிறது.அப்படிப்பட்ட காலங்களில் குளிா்சாதன வசதியின்மையால் பிரேதம் கெட்டுவிடுகிறது. அதன்பிறகே பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில் இப்பகுதியில் விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன.

அனாதையாக இறந்து கிடப்பவா்கள், விபத்தில் பலியானோா் என அடிக்கடி பிரேத பரிசோதனை நடக்கிறது.அனாதை பிரேதங்களை சில நாட்கள்சிலநாட்கள் கூட வைத்திருக்க வேண்டியுள்ளது.அப்போது பிரேத பரிசோதனை கூடத்தில் குளிா்சாதன வசதி இல்லாததால் பிரேதத்தை பாதுகாக்க முடியாமல் அழுகி துா்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பிரேத பரிசோதனை கூடத்தை குளிா்சாதன வசதி கொண்டதாக விரிவுபடுத்த வேண்டும் என்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com