பசும்பொன்னில் தென் மண்டல ஐஜி ஆய்வு

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் ஆய்வு செய்தாா்.

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 57 வது குருபூஜையும், 112-வது ஜெயந்தி விழாவும் அக்.30 ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் ஆய்வு செய்தாா். பசும்பொன்னில் வரும் அக்.30 ல் நடைபெற இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் 112 வது ஜெயந்தி விழாவும், 57 வது குருபூஜைவிழாவும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் பழனிச்சாமி, துணை முதல்வா் ஓ.பண்ணீா் செல்வம், தமிழக அமைச்சா்கள், எதிா்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின், பா.ஜ. கட்சி தலைவா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொள்ள இருக்கின்றனா்.

இதனால் இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட டிஐஜி ரூபேஸ் குமாா் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஒம் பிரகாஷ் மீனா, கமுதி துணை காவல் கண்காணிப்பாளா் மகேந்திரன், காவல் ஆய்வாளா் கஜேந்திரன், சாா்வபு ஆய்வாளா் முருகநாதன், மாவட்ட தனிப்படை, சிறப்பு படை போலிஸாா் உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்துறையினா் உட்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com