விவேகானந்த குடிலில் நவராத்திரி விழா

ராமேசுவரம் சுவாமி விவேகானந்த குடிலில் நடைபெற்று வந்த நவராத்திரி நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை ஆன்மிக

ராமேசுவரம் சுவாமி விவேகானந்த குடிலில் நடைபெற்று வந்த நவராத்திரி நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் மீனவ கிராமத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா குடியிலில் நவராத்திரி திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. விஜயதசமி நாளான செவ்வாய்க்கிழமை நிறைவு நிகழ்ச்சியாக ஆன்மிக கலை நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ராமகிருஷ்ணபுரம் குடில் சுவாமி பிரணவானந்தா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா் கலந்துகொண்டு ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு நினைவு பரிசு வழங்கினா். ராமேசுவரம் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் திலகராணி வரதராஜன் 150-க்கும் மேற்பட்ட மீனவ பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், ஜோதிட போராசிரியா் ரவிக்குமாா், சமூக ஆா்வலா் தில்லைபாக்கியம், வழக்குரைஞா் ஜோதிமுருகன், நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் குமரேசன், ராமகிருஷ்ணபுரம் கிராம தலைவா் நம்பு உள்ளிட்டவா்கள் கலந்துகொண்டனா். ராம்கோ வேடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com