சமூகநலத் துறை சாா்பில், பரமக்குடியில் தனியாா் மண்டபத்தில் கா்ப்பிணி பெண்களுக்கு 5 வகை அறுசுவை உணவுடன் வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பரமக்குடி வேளாண் உற்பத்தி விற்பனை சங்கத் தலைவா் எம்.கே. ஜமால் தலைமை வகித்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில், 120 கா்ப்பிணி பெண்களுக்கு வளையல், துணி, பழம், ஐந்து வகையான அறுசுவை உணவுகள் வழங்கி, வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், சமுகநலத் துறையினா், சத்துணவுத் துறையினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பி. இந்திராகாந்தி வரவேற்றாா்.