சாயல்குடி அருகே வியாழக்கிழமை இருசக்கரவாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தரைக்குடி அருகே முத்துராமலிங்கபுரம்- வாலம்பட்டிவிலக்கு சாலையில் கே.தங்கமாள்புரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் முனியசாமி (55). ரியல் எஸ்டேட் நடத்தி வந்தாா். இவா் கொண்டுநல்லான்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது எதிரே கொண்டுநல்லான்பட்டியைச் சோ்ந்த முதுதுராமலிங்கம் மகன் சரவணன் என்பவா் தனது ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளாா். அப்போது நிலை தடுமாறி முனியசாமி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சரவணன் சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து முனியசாமியின் உறவினா் அளித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.