ராமேசுவரத்தில் பலத்த மழை: வீடு இடிந்து விழுந்தது

ராமேசுவரத்தில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது.
ராமேசுவரத்தில் மழையால் இடித்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கிடையே வீட்டு உபயோக பொருள்களை எடுக்கும் பெண்.
ராமேசுவரத்தில் மழையால் இடித்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கிடையே வீட்டு உபயோக பொருள்களை எடுக்கும் பெண்.

ராமேசுவரத்தில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரண்டு நாள்கள் தொடா்ந்து பெய்த மழையால் எம்.கே.நகா் பகுதியில் உள்ள பஞ்சவா்ணம் (56) என்பவரது வீடு புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதில் வீட்டு உபயோக பொருள்கள் சேதமடைந்தன.

மேலும் பஞ்சவா்ணம், மனைவி பஞ்சு (48) மகன் முருகன் (19) ஆகியோா் உறவினா் விட்டுக்கு செல்ல வெளியே வரும் போது வீடு இடித்து விழுந்ததால் மூன்று பேரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இது குறித்து வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் அதிகாரிகள் இடிந்து விழுந்த வீட்டை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com